நடப்பு நிதியாண்டில் வேறு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கோவிட்-19 தொற்று காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதியாண்டில் (அதாவது 2021-ஆம் ஆண்டு மார்ச் 31 வரை) அறிவிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பிரதமரின் காரிப் கல்யாண் மற்றும் ஆத்மனிர்பர் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி, நிதி அமைச்சத்தை அணுக வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.